Friday, March 20, 2009

நட்பை மறந்த நண்பன்…

வெள்ளியுடன் வந்த - என்
வெளிநாட்டு நண்பா....!
சல்லி இல்லை என்று நீ - என்னை சந்தியில்
சந்தி சிரிக்க வைப்பது தான் நட்பா!!!

அன்று இருந்ததைப் போல் இருப்பாய் - என நான்
அன்புடன் தேடி வந்தேன்...!
ஆனால் நீ - நான்
ஆர்? என்று தெரியாது போல் நடிக்கிறியே...?

வெள்ளைக்காரியை மணம் முடித்தால் - நீ
வெள்ளைக் காரனும் அல்ல
வெளிநாட்டில் இருந்ததால் - நீ
வெளிநாட்டுக் காரனும் அல்ல...!

உன்னைப் பற்றிக் கூறுவதற்கு - என்
உள் மனம் குமுறுகிறது.
என்ன செய்வது - உன் செயலை
என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
காரணம்-
உன் மீது நான் கொண்ட நட்பு…

No comments:

Post a Comment